திருவனந்தபுரம் அருகே 12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை!!
திருவனந்தபுரம் அருகே உள்ள காரமனை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி, (வயது 47), கூலித் தொழிலாளி.
இவருக்கு மனைவியும், 12 வயதில் 6–ம் வகுப்பு படிக்கும் மகளும், 4–ம் வகுப்பு படிக்கும் இன்னொரு மகளும் உள்ளனர். கடந்த 2012–ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மூத்த மகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
அவரது தாய் கூலி வேலைக்கு சென்று விட்டார். தங்கை பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த கிருஷ்ணன்குட்டி பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
மேலும் இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று மகளை மிரட்டியதால் அவர் யாரிடமும் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறவில்லை. தொடர்ந்து மகளை மிரட்டி கிருஷ்ணன்குட்டி பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அந்த சிறுமியை அவரது தாய் அழைத்துச்சென்றார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி சைல்டு லைன் அமைப்பு மூலம் திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன்குட்டியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவனந்தபுரம் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கிருஷ்ணன்குட்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
Average Rating