ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர் தற்கொலை முயற்சி!!

Read Time:4 Minute, 31 Second

7205137b-ea5c-4933-9c17-42ab130b31ae_S_secvpfஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் சாகித்யா (வயது 19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

அம்மாபேட்டை காமராஜர் வீதியை சேர்ந்த மயில்சாமி என்பவரது மகன் மோகன் (18) 9–ம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது வேன் கிளீனராக வேலைப்பார்த்து வருகிறார்.

மாணவி சாகித்யா கல்லூரி செல்லும் போதும் திரும்பி வரும் போதும் அவரை பார்த்த வாலிபர் மோகனுக்கு சாகித்யா மீது காதல் அரும்பியது. தனது காதலை மாணவியிடம் கூறியதாக தெரிகிறது.

இதற்கு சாகித்யா அவரை திட்டினார். ‘‘இந்த வயசில் காதலா? காதலை விட்டு விட்டு உழைச்சு முன்னேறும் வழியை பாரு…’’ என்று அவருக்கு சாகித்யா புத்திமதி சொன்னதாக கூறப்படுகிறது.

எனினும் வாலிபர் மோகனோ, ‘‘கண்டிப்பா நீ என்னை காதலிக்க வேண்டும். நாம் திருமணம் செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

இதற்கிடையே நேற்று இரவு 7 மணி அளவில் மாணவி தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மதில் சுவர் ஏறி மோகன் உள்ளே குதித்தார். இதை கண்டு சாகித்யா அதிர்ச்சி அடைந்தார். அப்போது மோகன் தன்னை காதலிக்கும் படியும் தன் காதலை ஏற்றுக்கொள்ளும் படியும் கூறினார். ஆனால் சாகித்யா மறுத்து அவரை சத்தம் போட்டார்.

இதில் ஆத்திரம் தலைக்கேறிய மோகன், தான் மறைத்து கொண்டு வந்த கத்தியுடன் சாகித்யா மீது திடீரென பாய்ந்தார். பிறகு மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். தடுத்த போது சாகித்யாவின் கையையும் அறுத்தார்.

இதில் ரத்தம் பீறிட்ட நிலையில் மாணவி அபாய குரலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர்.

உடனே மோகன் அங்கிருந்து கத்தியுடன் தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் வலியால் மயங்கி விழுந்த மாணவி சாகித்யாவை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுபற்றி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தப்பி ஓடிய மோகன், அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவில் முன் வந்து நின்றார். பிறகு திடீரென காவிரி ஆற்றில் பாய்ந்து குதித்து அக்கரைக்கு நீந்தி சென்றார். அக்கரையில் உள்ள சேலம் மாவட்டம் கரட்டுப்புதூர் என்ற இடத்தில் ஆற்றின் கரையோரம் படுத்து கிடந்தார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு நாய் குரைத்து கொண்டிருப்பதை கண்டு அங்கு வந்தனர். மோகன் படுத்து கிடந்ததை கண்டு ‘‘யார் நீ… இங்கு என்ன செய்கிறாய்..? என்று கேட்டனர்.

உடனே மோகன் கத்தியால் தனது கழுத்து குரல் வளையை திடீரென அறுத்து கொண்டார். பிறகு அப்படியே சரிந்து விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். பிறகு அதன் மூலம் ஏற்றி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிங்கா உண்மையிலேயே நஷ்டமா..? சரி பார்க்க பொறுப்பாளர் நியமனம்!!
Next post களக்காடு அருகே பெண் தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டிய பெண் கைது!!