கொல்லிமலையில் காவலாளியை கொன்று சாக்குமூட்டையில் பிணம் வீச்சு!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பூந்தோட்டம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகில் கிடந்த ஒரு மூட்டையில் இருந்த துர்நாற்றம் வீசியது. மேலும் அந்த மூட்டையில் ரத்த கறையும் படிந்து இருந்தது. இதையடுத்து வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சப்–இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் யார்? என்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த நபர் பூந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் இரவு காவலாளி ரத்தினம் (45) என்பது தெரியவந்தது. கிருஷ்ணகிரியை சேர்ந்த இவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக பள்ளியிலேயே தங்கி பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating