நங்கநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு!!
Read Time:1 Minute, 6 Second
நங்கநல்லூர் 22–வது தெருவைச் சேர்ந்தவர் மனோகரன், இவரது மனைவி சசிகலா (48). இவர் இன்று காலை 7 மணி அளவில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சசிகலா கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசில் சசிகலா புகார் செய்தார். பறிபோனது கவரிங் நகை என்பது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழவந்தாங்கலில் நகை பறிப்பு சம்பவம் நடந்தது. ஜோசப் காலனி 2–வது தெருவைச் சேர்ந்த கலா என்ற பெண்ணிடம் மர்ம ஆசாமிகள் நகையை பறித்து சென்றனர். அதுவும் கவரிங் நகை என்பது தெரிய வந்தது.
தொடர் நகை பறிப்பு சம்பவம் பழவந்தாங்கலில் பெண்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating