இங்கிலாந்தில் காந்தி சிலை அமைக்க இன்போசிஸ் நாராயணமூர்த்தி 2 கோடி ரூபாய் நன்கொடை!!
இங்கிலாந்தில் காந்தி சிலை அமைக்க இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 2 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளனர்.
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் முழு உருவச் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை லண்டன் வாழ் இந்திய தொழில் அதிபர் மேக்நாத் தேசாய் தலைமையிலான காந்தி நிலை நினைவு அறக்கட்டளை செய்து வருகிறது. 7 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டு செலவில் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7.5 கோடி) அமைய உள்ள இத்திட்டப்பணிக்காக நிதி திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காந்தி சிலையை நிறுவும் இந்த சீரிய முயற்சிக்கு இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, அவரது மனைவி சுதா, பிள்ளைகள் அக்சதா, ரோகன் மூர்த்தி ஆகியோர் சார்பில் 2 லட்சம் பவுண்டு (சுமார் 2 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நிதி திரட்டும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால், ஓரிரு மாதங்களில் சிலை திறப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating