அஜித்தின் திருப்பதி விஜயத்தின் மர்மம் என்ன?

Read Time:1 Minute, 50 Second

ajith1அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப்ரவரி 5-ந் திகதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா-திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அஜித், இன்று அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவரை ரசிகர்கள் பலரும் சூழ்ந்துகொண்டு அவருடன் கைகுலுக்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களது வாழ்த்துக்களை அஜித்தும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார். மேலும், ரசிகர்கள் அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

சாமி தரிசனத்தின் போது அஜித் வெள்ளை வேஷ்டியும், வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். முகத்தில் சற்று வளர்ந்த தாடியுடனும், தலையில் முடியை சற்று ட்ரிம் செய்திருந்தார். முக கண்ணாடியும் அணிந்திருந்தார்.

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு முன் அஜித் நடித்த ‘வீரம்’ படம் முடிவடைந்த கையோடு, அஜித்தும், ‘வீரம்’ படத்தின் இயக்குனர் சிவாவும் திருப்பதி சென்று மொட்டை போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பழிப்பு சம்பவம் நடந்த நான்கே மாதங்களில் மூன்று சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை!!
Next post திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு: போலீசார் விசாரணை!!