விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே 100 போலி மதுபாட்டில் பறிமுதல்: 2 பேர் கைது!!
Read Time:1 Minute, 7 Second
விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விருத்தாசலம் பஸ் நிலைய பகுதியில் சென்ற போது பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும் படியாக 2 பேர் பையுடன் நின்றிருந்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து பைகளை சோதனையிட்டனர்.
இதில், அந்த பைகளில் புதுவையில் இருந்து கடத்தப்பட்ட 100 போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், போலி மதுபாட்டில்களை கடத்தியவர்கள் விருத்தாசலம் லூகாஸ் தெருவை சேர்ந்த பிரகாஷ் (வயது 45), சுபாஷ் (27) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Average Rating