உ.பி.யில் பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுவன் சுட்டுக் கொலை!!
Read Time:1 Minute, 6 Second
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 7 வயது சிறுவனை அடையாளம் தெரியாத இரு நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள நகுரா கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது அவ்வழியே வந்த இருவர், பிஞ்சு சிறுவன் என்றும் பாராமல் அவனை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
துடிதுடித்து கீழே விழுந்த அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த கோரப் படுகொலையை செய்தவர்கள் யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating