கள்ளக்காதலியுடன் நெருங்கி பழகிய டிரைவர் மீது தாக்குதல்: வாலிபர் ஆத்திரம்!!

Read Time:2 Minute, 0 Second

ec6c38ab-bd31-4a5c-be3b-841ef9bf0122_S_secvpfவேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் துர்கா (வயது 30) பெயர் மாற்றப்பட்டுள்ளது. திருமணம் ஆனவர். கணவர் இல்லாததால் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார்.

அதே மில்லில் அய்யர் மடத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகினர். அது கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக துர்கா வெங்கடேசுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் வெங்கடேஷ் சஞ்சலப்பட்டார். கள்ளக்காதலி தன்னுடன் ஏன்? பேச மறுக்கிறாள் என்று அவர் விசாரித்தபோது துர்காவை வேலைக்கு அழைத்து வரும் வேன் டிரைவர் வேடசந்தூர் சாலையூரை சேர்ந்த கார்த்திக் (26) நெருங்கி பழகிவருவது தெரிய வந்தது.

இதனால் வெங்கடேஷ் அவர் மீது ஆத்திரம் அடைந்தார். கார்த்திக் நேற்று மில் வேலைக்கு பெண்களை வேனில் அழைத்து வந்தபோது வெங்கடேஷ் நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து வழி மறித்தார். பின்னர் அவர்கள் கார்த்திக்கை கீழே இழுத்து போட்டு தாக்கினர்.

இது குறித்து கார்த்திக் கூம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வெங்கடேசின் நண்பர் பூதிப்புரத்தை சேர்ந்த மூப்பராஜ் என்பவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயற்கை உபாதையை கழிக்க சென்ற 15 வயது சிறுமியை கடத்தி 4 நாட்களாக அடைத்துவைத்து கற்பழித்த இருவர் கைது!!
Next post சேலத்தில் அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு நர்சிங் பயிற்சி மாணவி தற்கொலை முயற்சி!!