சேலத்தில் அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு நர்சிங் பயிற்சி மாணவி தற்கொலை முயற்சி!!
Read Time:1 Minute, 7 Second
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மரியநாத புரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் தமிழ்செல்வி (20). இவர் சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்.சி. நர்சிங் 4–ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவி தமிழ்செல்வி நேற்று இரவு அளவுக்கு அதிகமாக 30 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இன்று காலை மயங்கிய நிலையில் இருந்த தமிழ்செல்வியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நர்சிங் பயிற்சி மாணவி தமிழ்செல்வி தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன என்று இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating