மாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் சரண்: கணவருடன் செல்ல மறுப்பு!!
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வாழ்க்கை கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (30). விவசாய கூலி தொழிலாளி.
இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த பிரியாவுக்கும் (26) கடந்த 3 வருடத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.
இந்த நிலையில் பிரியாவுக்கும் அதே பகுதி நடுத் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சின்னராஜாவுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டது.
சின்னராஜாவுக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 2.5.14 அன்று பிரியா தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறினார். அய்யப்பன் அவரை அரியலூருக்கு பஸ் ஏற்றி விட்டார்.
ஆனால் பிரியா தாய் வீட்டுக்கு செல்லவில்லை. அவர் மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அய்யப்பன் அப்போதே கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பிரியா தனது காதலன் சின்னராஜாவுடன் கபிஸ்தலம் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர் கணவருடன் செல்ல விருப்பம் இல்லை என திட்ட வட்டமாக கூறிவிட்டார்.
இருவரிடமும் போலீசார் எழுதி வாங்கி விட்டு காதலனுடன் பிரியாவை அனுப்பி வைத்தனர்.
Average Rating