தேனி அருகே மனைவி–மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற விவசாயி!!
இடுக்கி அருகில் உள்ள கிழகம்பாளம் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ்(வயது65). இவரது மனைவி அன்னம்மாள்(55). இவர்களது மகள் எலிசபெத்(40). வர்கீஸ் கூலி வேலைபார்த்து தனது குடும்பத்தை கவனித்து வந்தார். எலிசபெத்துக்கு போலியோ நோய் தாக்கி 2 கால்களும் செயலிழந்து விட்டன. அன்னம்மாள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
கூலி வேலைபார்த்து வந்த வர்கீஸால் மனைவி, மகளுக்கு மருத்துவ செலவு செய்யமுடியாமலும், சாப்பாட்டுக்கு பற்றாக்குறையாலும் கஷ்டப்பட்டு வந்தார்.
இதனால் நோயால் கஷ்டப்படும் மனைவி–மகளை கொலை செய்ய முடிவெடுத்து அவர்கள் 2 பேரையும் தலையணையால் அமுக்கி மூச்சு திணற வைத்து கொலை செய்தார். இதனையடுத்து தானும் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து வீட்டை தட்டியபோது அன்னம்மாளும், எலிசபெத்தும் இறந்து கிடந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வர்கீஸை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து கிழகம்பாளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating