திண்டுக்கல்: மாமியாரை வெட்டி சாய்த்த மருமகனின் கள்ளக்காதலி கைது!!

Read Time:2 Minute, 4 Second

34ba27d5-e293-4366-ba74-2fee241773e5_S_secvpfதிண்டுக்கல் அருகில் உள்ள நாகம்பட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி காவேரி (வயது35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவேரியார் பாளையத்தை சேர்ந்த சசிகலா (40) என்பவரது வீட்டில் குடியிருந்து வந்தார். அப்போது சசிகலாவின் மருமகனுக்கும், காவேரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்த விபரம் சசிகலாவிற்கு தெரியவரவே காவேரியை கண்டித்தார். இருந்தபோதும் அவர்களது தொடர்பு நீடித்து வரவே வீட்டை காலிசெய்யும்படி சத்தம் போட்டார். இதனையடுத்து காவேரி அந்த வீட்டை காலிசெய்துவிட்டு நாகம்பட்டியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடிவந்தார்.

வீடு மாறிய பிறகும் சசிகலாவின் மருமகனுக்கும், காவேரிக்கும் கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது. நேற்று மாலை காவேரி வீட்டிற்கு வந்த சசிகலா தனது மருமகன் உடனான தொடர்பை நிறுத்திவிடும்படி எச்சரித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காவேரி அரிவாளால் சசிகலாவை வெட்டினார். ரத்தம் சொட்டிய நிலையில் சசிகலா அங்குள்ள கோவிலில் மயங்கி விழுந்தார்.

அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டதின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காவேரியை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்காக துருக்கிக்கு சென்ற 19 வயது ஐதராபாத் இளம்பெண் மனம் மாறி திரும்பி வந்தார்!!
Next post தத்தெடுத்த குழந்தைகளுக்காக வீடு கட்டும் ஹன்சிகா!!