திருமங்கலம் மருத்துவமனையில் அரசு ஊழியர் தற்கொலை!!
Read Time:1 Minute, 16 Second
திருமங்கலம் முகமதுஷா புரத்தில் குடியிருப்பவர் லோகேஸ்வரன் (வயது58). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவகல்லூரியில் வேன் டிரைவராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்
இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர், குணமாகி நேற்று வீட்டிற்கு வந்திருந்தாராம்.
இரவு வீட்டில் இருந்து ஓமியோபதி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி செல்வி, மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்லப் பாண்டியன், உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
Average Rating