பெண்ணாடத்தில் ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை!!

Read Time:3 Minute, 37 Second

a0d81cc1-9f70-413a-b838-3433593cc213_S_secvpfகடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே எரப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி, விவசாயி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 17). இவர் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக விஜயகாந்த் பள்ளிக்கு செல்லவில்லை.

5 நாட்களுக்கு பின்னர் விஜயகாந்த் பள்ளிக்கு சென்றபோது அவரை வகுப்பு ஆசிரியர் அனுமதிக்கவில்லை. உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவ சான்றிதழோ அல்லது பெற்றோரையோ அழைத்து வரும்படி விஜயகாந்த்தை வகுப்பு ஆசிரியர் திருப்பி அனுப்பி விட்டார். ஆனால் விஜயகாந்த் இதனை பெற்றோரிடத்தில் தெரிவிக்கவில்லை. மேலும் 2 நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

பள்ளிக்கு செல்லாதது ஏன் என்று விஜயகாந்த்திடம் பெற்றோர் விசாரித்தபோது நடந்த விவரத்தை கூறினார். இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை அவரது தாய் லட்சுமி பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது வகுப்பு ஆசிரியரும், பள்ளி தலைமை ஆசிரியரும் விஜயகாந்த் சரியாக படிப்பதில்லை என்றும், பள்ளிக்கும் வருவதில்லை என்றும், பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில் இதுபோன்று பள்ளிக்கு வரவில்லை என்றால் எப்படி தேர்ச்சி பெறமுடியும் என்று விஜயகாந்த் பற்றி அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது பேசிக்கொண்டிருக்கும்போதே விஜயகாந்த் திடீரென பள்ளியை விட்டு வெளியேறினார். சிறிது நேரத்தில் பெண்ணாடம் அருகே தாழங்குட்டை என்ற இடத்தில் விஜயகாந்த் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதனால் லட்சுமி அலறியடித்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு சென்று உறவினர்கள் உதவியுடன் விஜயகாந்த்தை மீட்டு பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், அதன் பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று விஜயகாந்த் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து லட்சுமி பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். புகாரில் பள்ளி தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் கண்டித்ததாலேயே தனது மகன் விஜயகாந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதமர் மோடி காதை பிடித்து செல்லமாக திருகியபோது புன்சிரிப்புடன் நெளிந்த சிறுமி!!
Next post புது காதலிக்காவது தாலி கட்டுவாரா?