பிளஸ்–2 படிக்கும் மகன் வீட்டை விட்டு ஓடியதால் தந்தை தற்கொலை!!

Read Time:2 Minute, 0 Second

abadef14-de87-437b-aab5-0ad42f5bdeca_S_secvpfவியாசர்பாடி பாரதிநகர் 1–வது தெருவை சேர்ந்தவர் சேதுபதி (45). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு மணிகண்டன் (17), முத்து (15) ஆகிய மகன்கள் உள்ளனர்.

மணிகண்டன் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தான். நன்றாக படிக்கும்படி அவனுக்கு சேதுபதி அறிவுரை கூறினார். இந்த நிலையில் மணிகண்டன் வீட்டை விட்டு ஓடிவிட்டான்.

மகன் வீட்டை விட்டு சென்றதால், ‘‘அருமையாக வளர்த்த மகன் படித்து பெரியவனாகி குடும்பத்துக்கு உதவுவான் என்று நினைத்தேன்… இப்படி ஓடிவிட்டானே…’’ என்று சேதுபதி கூறி வந்தார்.

நேற்று ஜெயபாரதி வேலைக்கு சென்றிருந்தார். மற்றொரு மகன் முத்து பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டான்.

மாலையில் வீட்டில் தனியாக இருந்த சேதுபதி வீட்டை விட்டு ஓடிய மகன் மணிகண்டனை நினைத்து மீண்டும் வேதனைப்பட்டார். மனம் உடைந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீடு திரும்பிய ஜெயபாரதி கணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதறி துடித்தார். மற்றொரு மகன் முத்துவும் தந்தை உடலை கண்டு கதறி அழுதான். சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப்–இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைக்காக காத்திருக்கும் நடிகர்!!
Next post செயின் பறிப்பு-கொள்ளை சம்பவங்கள்: பெண்கள் பாதுகாத்து கொள்வது எப்படி?