கொருக்குப்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு!!
Read Time:54 Second
கொருக்குப்பேட்டை முனீஸ்வரர் நகரை சேர்ந்தவர் நவநீதம்மாள் (75). வீட்டில் தனியாக வசிக்கும் இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். நேற்று வீட்டில் இருக்கும் போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் புகுந்து நவநீதம்மாளை கட்டையால் தாக்கி 5 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.
அவரது அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க டி.வி.யை சத்தமாக ஒலிக்க செய்தனர். கொள்ளையன் தாக்குதலில் மயக்கமடைந்த நவநீதம்மாள் மயக்கம் தெளிந்ததும் போலீசில் புகார் செய்தார். இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating