சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டீ, காபி பரிமாறும் பேப்பர் கப்களில் மோடி, அமித்ஷா படங்கள்: விசாரணைக்கு உத்தரவு!!
டெல்லியில் இருந்து பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசுக்கு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் படங்களின் கூடிய பேப்பர் கப்களில் டீ, காபி விற்பனை செய்யப்படுவதாக காங்கிரஸ் பிரமுகர் குற்றம்சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ள ஜலந்தர் நகர காங்கிரஸ் தலைவர் விரேந்தர் ஷர்மா, டெல்லி சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்திலும் தனது புகைப்படம் இடம்பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் பிரதமர் மோடி இதுபோன்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வடக்கு பிராந்திய ரெயில்வே நிர்வாகத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நீரஜ் சர்மா, பா.ஜ.க. விழாக்களுக்கு பேப்பர் கப்களை சப்ளை செய்யும் நிறுவனம் தவறுதலாக அந்த கப்களை ரெயில்வே கேண்டீனுக்கு அனுப்பி இருக்கலாம்.
எனினும், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உள்நோக்கத்துடன் யாராவது தவறு செய்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Average Rating