நிர்வாண நிலையில் மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்ட 3 வயது பெண் குழந்தை: பீகாரில் கொடூரம்!!

Read Time:2 Minute, 13 Second

a1b04f84-ac8c-4709-92e9-d8f2dd1ab0cb_S_secvpfபீகார் மாநிலத்தில் தர்பாங்கா மாவட்டத்தில் பெண் ஒருவர் கடந்த வியாழனன்று, தனது 3 வயது பெண் குழந்தையுடன் தயானந்த மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். தாயும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்தபோது அங்கிருந்த அறிமுகம் இல்லாத நபர் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து சாக்லெட் வாங்கித் தருவதாக சொல்லிவிட்டு குழந்தையை வெளியே அழைத்து சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் குழந்தை திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் குழந்தையை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மதுபானி மாவட்டத்தின் பங்கா கிராமத்தில் உள்ள மரத்தில் ஆடைகள் இல்லாமல் சுயநினைவற்ற நிலையில் அந்த பெண் குழந்தை தலைகீழாக தொங்க விடப்பட்டிருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் ரீதியாக குழந்தை துன்புறுத்தப்பட்டதா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு வெளியான பின்பு தான் என்ன நடந்தது என்று தெரியவரும் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் வழிபட்டார் அஜீத்!!
Next post வருண் மணியனுக்கு மிரட்டல்!!