எழும்பூர் லாட்ஜில் தங்கிய ஜப்பான் வாலிபர் திடீர் மாயம்!!
Read Time:1 Minute, 18 Second
எழும்பூர் போலீஸ் நிலையம் அருகே ஹால்ஸ் ரோட்டில் தனியார் சொகுசு லாட்ஜ் உள்ளது. இங்கு கடந்த 29–நதேதி அதிகாலை ஜப்பான் நாட்டைச் நேர்ந்த வாலிபர் யுகிதா தங்கினார். அன்று காலை 11 மணி அளவில் அறையை பூட்டி விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த ஓட்டல் மானேஜர் சேகர் எழும்பூர் போலீசில் புகார் செய்தார்.
பூட்டி இருக்கும் அறையின் உள்ளே யுகிதாவின் சூட்கேஸ் மற்றும் பொருட்கள் உள்ளது. எழும்பூர் கோர்ட்டு முன்பு வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால் இன்று மாலை லாட்ஜ் அறையை உடைத்து சூட்கேசில் உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்வார்கள் என்று தெரிகிறது.
லாட்ஜில் மாயமான ஜப்பான் வாலிபரின் சூட்கேஸ் கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating