ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!!
Read Time:1 Minute, 22 Second
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்த ஆண்டு தொடங்கி பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் நேற்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேர் பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 26 பெண்கள் 23 ஆண்கள் உட்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் அதிகபட்சமாக ஜெய்ப்பூர் மாவட்டத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் இருப்பது அறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating