குடிபோதையில் மனைவியை கொடுமை செய்த போலீஸ்காரர் குத்திக்கொலை: மனைவியின் அக்கா ஆத்திரம்!!

Read Time:1 Minute, 35 Second

b34a5b23-d851-4e8c-a5fb-7eba1c2c8bc6_S_secvpfகேரள மாநிலம் தொடு புழாகரிப்பனாநாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (வயது46). இவர் குளமாவு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுஜீவ். இவர்களுடன் சுஜீவ்வின் அக்கா சரசம்மாவும் (52) வசித்து வந்தார்.

ராஜுவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார்.

மேலும் அவர் ஒழுங்காக வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையும் ராஜு குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

இதைப்பார்த்து கொண்டிருந்த சரசம்மாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சமையல் அறையில் கத்தியை எடுத்து வந்து ராஜுவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சரசம்மாவும் கைது செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!!
Next post 6 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை: நகை பட்டறை ஊழியர்களிடம் தீவிர விசாரணை!!