துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட கல்லூரி மாணவியின் மர்மப் பிணம்: லக்னோ மக்கள் அதிர்ச்சி!!

Read Time:1 Minute, 49 Second

16e92ee9-1e4a-4e06-a93a-62ba751ec9e8_S_secvpfகொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு பிரபலமான உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் கல்லூரி மாணவியின் உடல் துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்ட உள்ளூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் கால்கள் மட்டும் ஆமினாபாத் பகுதியில் கிடந்ததை கண்ட சிலர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கியபோது கான்பூர்-பைசாபாத் நெடுஞ்சாலைகளை இணைக்கும் ஷஹீத்பாத் அருகே சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் துண்டுத்துண்டாக வெட்டி சிதைக்கப்பட்ட அந்த மாணவியின் மிச்ச உடல் பாகங்கள் கிடைத்தன.

கொலையான மாணவி ஆமினாபாத் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ஒரு கல்லூரியில் பி.ஏ.படித்து வருவதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர கொலை தொடர்பாக அந்த மாணவியின் நண்பர்கள் இருவரை கைது செய்த லக்னோ போலீசார், அவரது செல்போனுக்கு வந்த இதர அழைப்புகளை வைத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் 5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன் கைது!!
Next post ராஜஸ்தானில் வங்கி மேலாளரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கொள்ளை!!