ராஜஸ்தானில் வங்கி மேலாளரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கொள்ளை!!
Read Time:59 Second
ராஜஸ்தான் மாநிலம் கரவுளி மாவட்டத்தில் வங்கி மேலாளரிடமிருந்து மர்ம நபர்கள் 20 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நதாவுதி பகுதியில் உள்ள அந்த வங்கிக்கு வெளியே மேலாளர் பணத்துடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய மர்ம நபர்கள் அவர் வைத்திருந்த பையை திடீரென பறித்துச் சென்றனர். அதில் 20 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. உடனடியாக அவர் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனடியாக ஒருவன் போலீசில் பிடிபட்ட நிலையில், மற்றொரு திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating