மேட்டுப்பாளையத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு சாவு!!

Read Time:1 Minute, 32 Second

c1225126-a14a-47e4-9114-0ec28c0a7505_S_secvpfமேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மார்க்கெட் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். ஊட்டி மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மகன் கவுதம்ராம். பி.சி.ஏ. முடித்துள்ளார். கடந்த 2 வருடமாக வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது மனநிலை பாதிக்கப்பட்டது. எனவே கோவையில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்றார்.

அதன் பின்னர் வீடு திரும்பினார். நேற்று பிற்பகல் பெட்டிக்கடையில் இருந்து வீட்டுக்குச் சென்ற அவர் அதன் பின்னர் கடைக்கு திரும்பவில்லை.

சந்தேகமடைந்த அவரது தந்தை வீட்டுக்கு சென்று பார்த்தபோது கவுதம்ராம் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டு சிவராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

கவுதம்ராம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயில் கழிவறைக்குள் தூக்கில் தொங்கிய வாலிபரின் பிணம்: கொலையா? தற்கொலையா?
Next post கும்மிடிப்பூண்டி அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை!!