பரங்கிமலையில் பஸ் பயணிகளிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது!!

Read Time:1 Minute, 49 Second

d81f3515-cec2-4d30-b149-b788a6102110_S_secvpfநேற்று மாலை தியாகராய நகரில் இருந்து ஸ்ரீபெரும் புதூருக்கு மாநகர பஸ் ஒன்று புறப்பட்டது.

பஸ் இரவு 7 மணியளவில் பரங்கிமலை பட்ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது 2 பெண்கள் ஒரு கை பையுடன் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்கள்.

இதை கண்ட ஆயுதப்படை போலீசார் 2 பெண்களையும் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் நடத்திய சோதனையில் 2 பெண்களிடமும் இருந்து ரூ.35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின் போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 பெண்களும் பஸ்களில் ஏறி பயணிகளிடம் இருந்து கைப்பை, பணம் ஆகியவற்றை திருடி வருவது தெரிய வந்தது. இதில் ஒரு பெண்ணின் பெயர் ஜோதி (27), மற்றொரு பெண் ஜமுனா (29) என்றும் தெரிய வந்துள்ளது.

ஆனால் இது உண்மையா என்பதில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை தமிழ் பேசுகிறார்கள். ஆனால் சேலத்தில் இருந்து வந்ததாக கூறுகிறார்கள். எத்தனை பேரிடம் திருடினார்கள் உண்மை என்ன? என்பது குறித்து தொடர்ந்து பரங்கிமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கும்மிடிப்பூண்டி அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை!!
Next post சிங்கம்புணரி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மச்சாவு: கணவர் மீது புகார்!!