கொருக்குபேட்டையில் மனைவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர்!!
Read Time:39 Second
கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோகிலா (32).
குடும்பத்தகராறில் ஜெயக்குமார் தனது மனைவியை கத்தியால் குத்தி உள்ளார். வயிற்றில் பலத்த கத்தி குத்து காயத்துடன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கோகிலா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி வருகிறார்கள்.
Average Rating