ராஜபாளையம் அருகே கழுத்தை நெரித்து மனைவியை கொன்ற தொழிலாளி!!

Read Time:1 Minute, 48 Second

e0783f1b-74c2-44bc-8a91-47825140a485_S_secvpfராஜபாளையம் அருகே உள்ளது மீனாட்சியாபுரம். இந்த பகுதியை சேர்ந்தவர் கசமாடசாமி (வயது 43). இவரது மனைவி பரிபூரணம் (40). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்தநிலையில் கசமாடசாமி வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கசமாடசாமி கோவைக்கு வேலைக்கு செல்ல தயாராக இருந்துள்ளார். அப்போது கணவன் – மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த கசமாடசாமி மனைவி பரிபூரணத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை ஜன்னல் வழியாக பார்த்த மகள் ஜெயக்கொடி ஓடி சென்று அதே பகுதியில் வசித்து வரும் பரிபூரணத்தின் சித்தப்பா மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பரிபூரணம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கசமாடசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழங்கியதாக வழக்கு: 3 பேருக்கு காவல் நீட்டிப்பு!!
Next post காதலர் தினம் கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு!!