ஊத்தங்கரை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த 1–ம் வகுப்பு மாணவி!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன், லாரி டிரைவர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகள் பூஜா (வயது 6).
சிறுமி பூஜா அதே ஊரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தாள். சிறுமி பூஜாவின் தந்தையான கோபால கிருஷ்ணனின் தாய், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தாள்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சிறுமி பூஜா பிணமாக மிதந்தாள்.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கல்லாவி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் இறங்கி சிறுமி பூஜாவின் உடலை மீட்டனர்.
இதையடுத்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுமியின் சாவில் மர்மம் உள்ளதாக ஊர் மக்கள் சிலர் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமி எப்படி கிணற்றில் விழுந்தாள்? முன் விரோதம் காரணமாக யாராவது சிறுமியை கொன்று கிணற்றில் தூக்கிப் போட்டார்களா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating