பாபி சிம்ஹாவுடன் இணைந்து நடிக்கும் சாண்ட்ரா!!
‘ஜிகர்தண்டா’ படத்திற்குப் பிறகு பாபி சிம்ஹாவிற்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர் தற்போது ‘உறுமீன்’, ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’, ‘பாம்பு சட்டை’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதில் உறுமீன் படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்கி வருகிறார். இதில் பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக ஆராதனா அறிமுகமாகிறார். மேலும் இவர்களுடன் காளி, அனுபமா குமார், கலையரசன், ‘மூடர்கூடம்’ மகேஷ்வரன், ஆண்டனிதாசன் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இந்த டீமுடன் தற்போது சாண்ட்ராவும் இணைந்துள்ளார். இப்படத்தில் இவர் பாபி சிம்ஹாவிற்கு தோழியாக நடித்து வருகிறார். நேற்று ‘உறுமீன்’ படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட சாண்ட்ரா கூறும்போது, இப்படத்தில் நான் பங்குபெறுவது மிகவும் உற்சாகமாக உள்ளது. என் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் ஜெனிபர் என்னும் கதாபாத்திரத்தில் தைரியமான பெண்ணாக நடிக்கிறேன் என்றார்.
Average Rating