3 பெண்களை பற்றிய புதுப்படத்தில் நடிக்கும் திரிஷா!!
திரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. தயாரிப்பாளர் வருண்மணியனை மணக்கிறார். இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு திரிஷா நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் எழுந்தன. அவரும் கடந்த ஓரிரு மாதங்களாக புதுப்படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். டைரக்டர்களிடம் கதை கேட்டதையும் தவிர்த்தார்.
இந்த நிலையில் தற்போது புதுப்படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்துக்கு ‘போகி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் திரிஷாவுடன் ஓவியா, பூனம்பாஜ்வா ஆகியோரும் நடிக்கின்றனர்.
எந்த இலக்கும் இல்லாமல் பயணிக்கும் மூன்று பெண்களை பற்றிய கதையே இப்படம். இதை பூபதி பாண்டியன் டைரக்டு செய்கிறார். இவர் அருண்குமார், மந்த்ரா நடித்த ‘ப்ரியம்’ படத்தை இயக்கி பிரபலமானவர். இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
ஓவியா, பூனம் பாஜ்வாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று திரிஷா டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார். அஜீத்துடன் திரிஷா நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் நாளை ரிலீசாகிறது. திரிஷாவுக்கு ‘அப்பாடக்கரு‘, ‘லயன்’, ‘ரம்’ ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.
Average Rating