நெல்லையில் அரசு பஸ்சில் இளம்பெண்ணுடன் கொஞ்சி குலவிய போலீஸ்காரர்: பயணிகள் முகம் சுழிப்பு!!
நெல்லையில் இருந்து தென்காசிக்கு நேற்று ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வைத்து ஒரு ஜோடி ஏறியது. சீட்டில் அமர்ந்த இந்த ஜோடி முதலில் அமைதியாக அமர்ந்திருந்தனர். பஸ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை கடந்த போது இந்த ஜோடி ஒருவருக்கொருவர் தோளில் கைபோட்டுக்கொண்டனர்.
பின்னர் பஸ் நெல்லையை கடந்ததும் இவர்களது விளையாட்டு அதிகமானது. ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களது கொஞ்சல் அத்துமீறியது. அருகில் நின்ற பயணிகள் இதை பார்த்து முகம் சுழித்தனர். இளம்பெண்ணுடன் வந்த வாலிபர் போலீஸ் தோரணையில் இருந்தார். இதனால் பயணிகள் அந்த ஜோடியை கண்டிக்க தயங்கினர்.
இதை சாதகமாக்கிகொண்ட அந்த ஜோடி மேலும் சல்லாபத்தில் ஈடுபட்டார்கள். பயணிகள் சிலர் கண்டக்டரிடம் கூறியபோது அவர் நமக்கேன் வம்பு என சென்றுவிட்டார். இந்த வேளையில் பஸ் ஆலங்குளம் வந்தது. இளம்ஜோடி பஸ்சை விட்டு இறங்கியது. பின்பு இருவரும் வேறு வேறு பஸ்சுக்கு சென்றுவிட்டனர். விசாரணையில் இளம்பெண்ணிடம் சில்மிசம் செய்தபடி வந்த வாலிபர் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும் போலீஸ்காரர் என்பதும் தெரியவந்தது.
அவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரிவதாகவும் அந்த பெண் குறிப்பன்குளத்தை சேர்ந்தவர் என்றும் பஸ்சில் வந்த பயணிகள் தெரிவித்தனர். பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூற வேண்டிய போலீஸ்காரரே பஸ்சில் அநாகரீகமாக நடந்துகொண்டது பயணிகளிடையே பரபரப்பை உண்டாக்கியது.
Average Rating