இறைச்சிக்காக பசு மாடுகளை கொன்றால் இனி குண்டாஸ் பாயும்: உ.பி.யில் அவசரச் சட்டம்!!
Read Time:1 Minute, 9 Second
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இனி இறைச்சிக்காக பசு மாடுகளை கொல்பவர்களை குண்டர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கும் அவசரச் சட்டத்துக்கு கவர்னர் ராம் நாயக் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த புதிய அவசரச் சட்டத்தின்கீழ், பசுக்களை கொல்வோர், ஆள்கடத்தல் பேர்வழிகள், முறைகேடான பணப்பரிமாற்றம் செய்பவர்கள், கள்ளத்தனமாக ஆயுதங்களை தயாரிப்பவர்கள் இனி சமூக விரோதிகளாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கவர்னர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 18-ம்தேதி சட்டசபை கூடும்போது புதிய மசோதாவை அறிமுகப்படுத்தி, இந்த அவசரச் சட்டத்தை சட்ட வடிவமாக்க ஆளும் சமாஜ்வாதி கட்சி முயற்சித்து வருகின்றது.
Average Rating