பெங்களூரில் 8 வயது சிறுமி கற்பழித்துக்கொலை: சாலையோரம் அனாதைப் பிணமாக கிடந்தாள்!!
கர்நாடக மாநிலம், ஹூப்ளி பகுதியை சேர்ந்த ஒரு ஏழை தம்பதியர் வேலை தேடி தலைநகர் பெங்களூருக்கு வந்து புறநகர் பகுதியான ஹோஸ்கோட் அருகே கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் 8 வயது பெண் குழந்தை இதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்து வந்தாள்.
நேற்று, பள்ளி நேரம் முடிந்த பின்னரும் தங்களது மகள் வீடு திரும்பாததை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை அருகாமையில் உள்ள சாலையோரத்தில் ஒரு சிறுமியின் பிணம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, அந்த சிறுமி கற்பழித்து, பின்னர் கொல்லப்பட்ட விபரம் வெளியாகியுள்ளது.
சிறுமியின் பிணம் கிடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது நேற்றிரவு அந்த சிறுமி ஒரு நடுத்தர வயது ஆணுடன் அப்பகுதியில் நடமாடியது தெரியவந்துள்ளது. அந்த நபர் சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமானவராக இருக்க வேண்டும் என கருதும் போலீசார், பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating