செல்போனில் பேசியதை கண்டித்ததால் வங்கி பெண் ஊழியர் தற்கொலை!!
Read Time:1 Minute, 5 Second
மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை வடிவேல் நகரை சேர்ந்தவர் சரண்யா (வயது 27). இவர் அலங்காநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வந்தார்.
இவர் செல்போனில் அடிக்கடி பேசியதால் வீட்டில் உள்ளவர்கள் கண்டித்தனர். இதனால் மனவேதனையில் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில் நேற்று அலுவலகத்தில் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்த சரண்யா திடீரென சேலையால் தூக்கு போட்டு கொண்டார். இதை பார்த்ததும் அவரது தந்தை சரண்யாவை மீட்டார்.
தகவலின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கண்ணன் விரைந்து வந்து சரண்யாவை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.
Average Rating