மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி கைது!!

Read Time:1 Minute, 40 Second

84c2ce6c-38db-4d72-8ca8-b7cecf34322e_S_secvpfகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அருகேயுள்ள ஸ்ரீகிருஷ்ணாபுரம் ஆட்டச்சேரியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சந்திரிகா (வயது 65). இருவரும் கூலித் தொழிலாளிகள். குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் அய்யப்பனுக்கும் அவரது மனைவி சந்திரிகாவுக்கும் இடையே வாய்த்தகராறு மூண்டது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சந்திரிகாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சந்திரிகா பரிதாபமாக இறந்தார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சந்திரிகா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுனில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்திரிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். சந்திரிகாவை கொலை செய்த அய்யப்பனை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியைக் கிண்டல் செய்த 10 வயது சிறுவன் கைது!!
Next post டெல்லி பாலியல் தொல்லை வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் பல்டியடித்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை!!