சென்னை அருகே மாணவருக்கு கத்திக்குத்து: 2 மாணவர்கள் கைது!!
Read Time:1 Minute, 20 Second
தரமணியில் மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் கேட்டரிங் டெக்னாலஜி படித்து வருபவர்கள் குல்தீப் (20), ராகுல்சிங் (20) ரவிகாந்த் (21),
இவர்களில் குல்தீப்சிங், ராகுல்சிங் இருவரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். ரவிகாந்த் பீகாரை சேர்ந்தவர்.
நேற்று 3 பேரும் பாலிடெக்னிக் எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆந்திரமடைந்த ராகுல்சிங், ரவிகாந்த் ஆகிய இருவரும் சேர்ந்து குல்தீப்பை கத்தியால் குத்தினார்கள்.
இதில் படுகாயம் அடைந்த அவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல்சிங், ரவிகாந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Average Rating