கொடுமைக்கார கணவனை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மனைவி!!
Read Time:1 Minute, 16 Second
மேற்கு வங்காளம் மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ரகுநாத் கஞ்ச் பகுதியில் வசித்து வந்த ஜாகிர் ஷேக் என்பவர் தனது மனைவி தாரா பீவியை தொடர்ந்து பலவிதங்களில் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அவரது செய்கையால் மனம் வெறுத்துப்போன தாரா பீவி நேற்றிரவு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த கணவனின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். ஜாகிர் ஷேக்கின் அலறல் சத்தம் கேட்டு விரைந்துவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் தீயை அணைத்து, அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தாரா பீவி மற்றும் அவரது உறவினர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating