ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க வந்த ஜப்பானிய மாணவியை போதை மருந்து கொடுத்து கற்பழித்த கைடு!!
Read Time:1 Minute, 28 Second
ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க வந்த ஜப்பானிய மாணவியை கைடு ஒருவர் போதை மருந்து கொடுத்து கற்பழித்துள்ளார்.
அம்மாநிலத்தில் தலைநகர் அருகே உள்ள டுடு என்ற இடத்தில் வைத்து, அந்த மாணவிக்கு போதை மருந்து கொடுத்த டூரிஸ்ட் கைடு பின்னர் அவரை கற்பழித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டுடு போலீசார் கைடை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடித்தி வருகின்றனர்.
முன்னதாக ஜெய்ப்பூருக்கு வந்த அப்பெண் அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது தான் கைடு அப்பெண்ணை சந்தித்துள்ளார். பின்னர் ஜெய்ப்பூரில் இருந்து 60 கி..மீ. தொலைவில் உள்ள டுடு என்ற இடத்தில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த கைடுடன் பைக்கில் அப்பெண் சென்றுள்ளார். அங்கு தான் போதை மருந்து கொடுத்து, தன்னை கைடு கற்பழித்தாக அப்பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
Average Rating