நெல்லை பஸ் நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய மன நோயாளி பெண்ணால் பரபரப்பு!!
Read Time:1 Minute, 14 Second
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இன்று காலை மனநலம் பாதித்த ஒரு பெண் பஸ் ஏற வந்தார். திடீரென்று ஒரு பஸ்சில் ஏறிய அவர் தனது ஆடைகளை கழட்டி வெளியே வீசினார். அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடுத்து வெளியே ஓடி வந்தனர்.
பஸ்சுக்குள் நிர்வாணமாக நின்ற அந்த பெண் பஸ்சை விட்டு இறங்க மறுத்தார். உடனே பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பேருந்து நிலையத்தில் உள்ள புற காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மாநகராட்சி துப்புரவு பெண் ஊழியர்களை வரவழைத்து அந்த பெண்னை பத்திரமாக மீட்க செய்தனர்.
அந்த பெண்ணுக்கு ஆடை அணிய செய்த ஊழியர்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணின் உறவினர்கள் யார் என விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating