காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: வேலூரில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து மகா சபையினரால் பரபரப்பு!!
Read Time:1 Minute, 15 Second
உலகம் முழுவதும் பிப்ரவரி 14–ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று காதலர்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்துக்கொள்வார்கள்.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் நாய், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வேலூரில் தலைமை தபால் நிலையம் அருகே இந்து மகா சபையினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு ஜோடி நாய்க்கு திருமணம் செய்து வைத்தனர்.
நாய்களுக்கு மாலை அணிவித்து மணமகன், மணமகள் என்று அட்டையில் எழுதி கொண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் காதலர் தினத்தை எதிர்த்து கோஷமிட்டனர்.
மாநில துணைத்தலைவர் தாமோதரன், கோட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் முருகன் உள்பட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்றனர்.
Average Rating