பெண்ணாடம் அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் நகை திருட்டு!!

Read Time:2 Minute, 53 Second

ad9fd1a2-5157-4ff6-bcd8-38d086610ec7_S_secvpfபெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 74), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனக்கு சொந்தமான 4 பவுன் நகையை திட்டக்குடியில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார். நேற்று அந்த நகையை மீட்க திட்டக்குடிக்கு சென்றார். பின்னர் நகையை மீட்டு தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு திட்டக்குடி பஸ் நிலையத்துக்கு வந்தார். இதைத்தொடர்ந்து வெண்கரும்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஊர் திரும்பிக்கொண்டு இருந்தார்.

நடுவழியில் பார்த்தபோது கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த நகையை காணாமல் ராமராஜன் திடுக்கிட்டார். கால்சட்டை பாக்கெட் பிளேடால் கிழிக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிளேடால் கிழித்து நகையை திருடிக் கொண்டு தப்பி சென்றுவிட்டது தெரிய வந்தது. பறிபோன நகையின் மதிப்பு ரூ. 1 லட்சமாகும்.

இதையடுத்து ராமராஜன் பெண்ணாடம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். ஆனால் பெண்ணாடம் போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். சம்பவம் நடந்த இடம் தங்களது எல்லை பகுதிக்குள் இல்லை என்று ராமராஜனை திருப்பி அனுப்பிவிட்டனர். இதைத்தொடர்ந்து ராமராஜன் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார். அங்கும் போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். திட்டக்குடிக்கும், பெண்ணாடத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் சம்பவம் நடந்துள்ளதால் இதுகுறித்து ஆவினங்குடி போலீசில் புகார் அளிக்குமாறு திருப்பி அனுப்பினர்.

ஏற்கனவே நகையை பறிகொடுத்துவிட்டு மனவேதனை அடைந்திருந்த ராமராஜனுக்கு போலீசார் அங்கும் இங்குமாக அலை கழித்தது மன உளைச்சலை ஏற்படுத்தியது. பின்னர் இறுதியாக அவர் ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பழிப்பு வழக்கை திரும்பப் பெறக்கோரி நேபாளப் பெண் 3 மாதம் சிறைவைப்பு!!
Next post கள்ளக்காதல் படுத்தும்பாடு: போலீஸ் நிலையத்தில் தாயிடம் கெஞ்சிய சிறுவன்!!