நெல்லுக்கு 50 ரூபா நிர்ணய விலை!!
50 ரூபா நிர்ணய விலைக்கு நெல் கொள்வனவு செய்வது குறித்து அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
50 ரூபா நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்தால் அரிசி விலை அதிகரிக்கும் என சிலர் பிரச்சாரம் செய்து வருவதாக கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் மிகவும் கஸ்டப்பட்டு நாட்டுக்கு சேவையாற்றுவதாகவும் அதனால் அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் நெல் ஆலைகள் 50% மூடப்பட்டுள்ளதாகவும் தனியாரிடம் இருந்து 30 ரூபாவிற்கு நெல் கொள்வனவு செய்து அதனை 50 ரூபா நிர்ணய விலைக்கு விற்பனை செய்யும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாகவும் அவற்றை எதிர்காலத்தில் இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
Average Rating