வத்தலக்குண்டுவில் ரேசன் கடை ஊழியர் கல்லால் தாக்கி படுகொலை!!

Read Time:2 Minute, 20 Second

ef71214b-ff33-4407-aad8-c27642f2bf7c_S_secvpfவத்தலக்குண்டு ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்து வந்தவர் அம்மாசி மகன் ஈஸ்வரன்(வயது41). இவர் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வத்தலக்குண்டு கூட்டுறவு பண்டக சாலையில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது ஒரே மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

இன்று அதிகாலை மாப்பிள்ளையான்தோப்பு சுடுகாடு எதிர்புறம் உள்ள தென்னந்தோப்பில் சுப்புக்கவுண்டர் என்பவரின் சமாதி உள்ளது. இதன் அருகே ஒரு ஓய்வு அறை ஒன்று உள்ளது. இந்த அறைக்குள் ஈஸ்வரன் தலை மீது கல்லை போட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதை பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தது வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலக்கோட்டை டி.எஸ்.பி சுருளிராஜன், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் வினோஜி, பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட ஈஸ்வரன் உடலை கைபற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல கொலைகள் பட்டப்பகலில் கொடூரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர். வத்தலக்குண்டு நகரில் இன்று நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கும்மிடிப்பூண்டியில் இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
Next post 7 செல்போன்களுடன் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது!!