பாரிமுனையில் லிப்டுக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஊழியர் பலி!!
Read Time:1 Minute, 2 Second
பாரிமுனை, தாத்தாமுத்தையப்பன் தெருவில் 4 மாடி புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் லிப்டு அமைக்கும் பணியில் ஆவடியைச் சேர்ந்த மோகன் (32) மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நேற்று இரவு பணி நடந்து கொண்டிருந்தபோது மோகன் முதல் மாடியில் நின்றார். திடீரென அவர் நிலை தடுமாறி லிட்டுக்கு தோண்டிய பள்ளத்துக்குள் விழுந்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மற்ற ஊழியர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating