பெங்களூரில், முன்விரோதத்தில் 8-ம் வகுப்பு மாணவனை கடத்திக் கொலை செய்த வாலிபர் கைது!!

Read Time:3 Minute, 47 Second

2c4c0afc-160e-4fd5-8ffd-254f4b1cd80f_S_secvpfபெங்களூரில் முன்விரோதத்தில் 8-ம் வகுப்பு மாணவனை கடத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மூடலபாளையா சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். மத்திய அரசு நிறுவனமான பி.இ.எம்.எல். நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா. இந்த தம்பதிக்கு கிரண்குமார் (வயது 14) என்ற மகன் இருந்தான். கிரண்குமார் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற கிரண்குமார் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த கிரண்குமாரின் தந்தை ரவிக்குமார், சந்திரா லேஅவுட் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் கிரண்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே தனக்கும், தன்னுடன் ஒன்றாக வேலை செய்து வரும் பக்கத்து வீட்டை சேர்ந்த மஞ்சுநாத் (22) என்பவருக்கும் முன் விரோதம் இருப்பதாகவும், தன் மகன் காணாமல் போனதற்கு மஞ்சுநாத் காரணமாக இருக்கலாம் என போலீசாரிடம் தனது சந்தேகத்தை ரவிக்குமார் தெரிவித்தார்.

உடனே போலீசார் மஞ்சுநாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாணவன் கிரண்குமாரை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதாவது கிரண்குமார் பள்ளியை விட்டு வீட்டுக்கு வரும் வழியில் மஞ்சுநாத், அவனை வழிமறித்து, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச்செல்வதாக கூறி மறைவான இடத்தில் வைத்து அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் ஞானபாரதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகம் பகுதியில் மறைவான இடத்தின் கழிவுநீர் கால்வாய் பகுதியில் மாணவன் கிரண்குமாரின் பிணத்தை போலீசார் மீட்டனர். அதே இடத்தில் கிரண்குமாரின் புத்தகப் பை, சாப்பாட்டு பாத்திரம் மற்றும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

மீட்கப்பட்ட கிரண்குமாரின் உடலை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கைதான மஞ்சுநாத்திடம் சந்திரா லே-அவுட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரட்டை வேடத்தில்….!!
Next post மீண்டும் மறுபிறவி எடுத்த பூனையின் கதை…!!