கேரளாவில் தமிழக பெண்ணை கடத்தி கற்பழித்த 4 பேர் கும்பல்!!
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ளது செங்கனூர். இந்த பகுதியில் உள்ள களமசேரி என்ற இடத்தில் ஏராளமான தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை வாகனங்களில் வந்து சம்பளம் பேசி கூலி வேலைக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் அவர்கள் இடத்தில் கொண்டு விட்டு செல்வது வழக்கம்.
நேற்று திருப்பூர் பகுதியை சேர்ந்த ஒரு 37 வயது பெண்ணும், 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் தங்கள் வீடு முன்பு நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு ஆட்டோ வந்தது. அதில் இருந்த வாலிபர் இந்த பெண்களிடம் ஒரு வீட்டில் புல்களை அறுக்கும் வேலை இருப்பதாக கூறி ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றார்.
இவர்கள் சென்ற ஆட்டோ ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு வீடு அருகே சென்றதும் இந்த 2 பெண்களையும் ஆட்டோ டிரைவரும் அதில் இருந்த வாலிபரும் அந்த வீட்டிற்குள் இழுத்து சென்றனர். அந்த வீட்டில் மேலும் 2 வாலிபர்கள் இருந்தனர்.
அதன் பிறகு ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரும் சேர்ந்து 55 வயது பெண்ணை கட்டிப்போட்டனர். அதைத் தொடர்ந்து 37 வயது பெண்ணை அந்த கும்பல் கொடூரமாக கற்பழித்தது. மேலும் அந்த கும்பலை சேர்ந்த ஒரு வாலிபர் கற்பழிப்பு காட்சியை தனது செல்போனில் படம் பிடித்தார்.
நடந்த சம்பவத்தை போலீசில் கூறினால் இந்த கற்பழிப்பு காட்சியை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவோம் என்று அந்த பெண்ணை அந்த கும்பல் மிரட்டியது. மேலும் அந்த பெண்களிடம் இருந்த செல்போன்கள், நகை, பணத்தை பறித்து கொண்டனர். பிறகு மீண்டும் அந்த 2 பெண்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அடர்ந்த காட்டு பகுதியில் விட்டு விட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. காட்டு பகுதியில் வழி தெரியாமல் தவித்து கொண்டு இருந்த அந்த பெண்களை அங்கு வந்த வனத்துறையினர் மீட்டு நடந்த சம்பவத்தை கேட்டு அறிந்தனர்.
இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று கற்பழிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக களமசேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். போலீசாரிடம் தன்னை கற்பழித்த 4 பேரையும் அடையாளம் காட்ட முடியும் என்று அந்த பெண் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை அவரிடம் காண்பித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating