கண்டித்தும் கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணின் அழகை சிதைக்க ஆசிட் வீசிய கணவன் கைது!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள பங்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் வகீல். பெயிண்டராக வேலை செய்துவரும் இவரது மனைவிக்கும் இதே பகுதியைச் சேர்ந்த இர்பான் என்பவருக்குமிடையில் சமீப காலமாக கள்ளத்தொடர்பு நிலவி வருவதாக சந்தேகித்த வகீல் 8 குழந்தகளுக்கு தாயான அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறி இர்பானுடனான தொடர்பை துண்டித்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
ஆனால், அவர்களுக்கிடையில் தொடர்பு வலுத்துக் கொண்டே வந்ததை அறிந்த வகீல் அந்த பகுதியில் இருந்த வீட்டை காலி செய்து விட்டு மஜீத் நகர் பகுதியில் குடியேறினார். வகீல் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவிய தேடி இந்த வீட்டுக்கும் வர ஆரம்பித்த இர்பான் இந்த கள்ளத்தொடர்பை தொடர ஆரம்பித்தார். இதனால், ஆத்திரமடைந்த வகீல் நேற்று மனைவியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்.
எரிச்சலால் கதறித்துடித்த அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் பற்றிய தகவலையறிந்த போலீசார் வகீலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating