காதலர் தினத்தன்று கள்ளக் காதலனுடன் உல்லாசம்: மனைவியை அடித்தே கொன்ற கணவன் தலைமறைவு!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருந்த மனைவியை காதலர் தினமான நேற்று அவரது கணவர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் மாவட்டத்தில் உள்ள ஐடல்பூர் கிராமத்தை சேர்ந்த விக்ரம் சிங் என்பவரின் மனைவியான கிருஷ்ணா(26) என்ற பெண் அதே பகுதியில் வசிக்கும் ஒருவருடன் சமீப காலமாக கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இது விக்ரம் சிங்கின் கவனத்துக்கு வந்ததும் இந்த கூடாநட்பை கைவிடும்படி அவர் கண்டித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று அந்த ஆணுடன் தனது மனைவி உல்லாசமாக இருந்த காட்சியை பார்த்துவிட்ட விக்ரம் மனைவியை வெறிபோன போக்கில் தாக்கினார். படுகாயமடைந்த கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மீரட் மாவட்ட போலீசார் தலைமறைவாக இருக்கும் விக்ரம் சிங்கை தேடி வருகின்றனர்.
Average Rating