ஜனாதிபதி – இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு
Read Time:48 Second
இந்திய வெளியுறவு செயலாளர் சியாம் சரண் இன்று காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராய்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இச் சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் நிருபமாராவ் , இலங்கையின் வெளியுறவு செயலாளர், அரச சமாதான செயலக பணிப்பாளர் பாலித ஹோகன், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் உடன் இருந்தனர்.